பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி அதிகாலை 3.30 மணிக்கு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 57. அவருக்கு நாளை இறுதிச் சடங்குகள் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்த மயில்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவரை போரூர் ராமசந்திரா மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது இறப்புக்கு திரை பிரபலங்கள் பலரும் இரங்களும், அஞ்சலியும் செலுத்தினர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் மயில்சாமி. இவர் 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் நடிகர், காமெடியன், நிகழ்ச்சி தொகுப்பாளர், சமூக சேவகர் என்ற பன்முகங்களை கொண்டவர். இவர் 1984ஆம் ஆண்டு தாவணி கனவுகள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்த. 2021 ஆம் ஆண்டு விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியை தழுவினார். சமூக உணர்வு, சமூக அக்கறை கொண்ட மயில்சாமி கொரோனா காலகட்டத்தில் தனது விருகம்பாக்கம் தொகுதியில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை செய்திருந்தார்.