இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை படமாகிறது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என செய்தி

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் சினிமா செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் விளம்பரங்கள் விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை கதைகள் சினிமாவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. பிரபல கிரிக்கெட் வீரர்கள் தோனி, சச்சின் டெண்டுல்கர், முகமது அசாருதீன் ஆகியோரின் வாழ்க்கைக் கதைகளைக் கொண்ட படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறும் சினிமாவாக இருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். ‘கொல்கத்தா தாதா’ என்று ரசிகர்கள் செல்லமாக அழைப்பதும் உண்டு.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை தனதாக்கிய சவுரவ் கங்குலியின் வாழ்க்கை திரைப்படமாக எடுக்கப்பட இருக்கிறது. ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். சவுரவ் கங்குலி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா நடிக்கிறார். இந்த படத்துக்காக ஆயுஷ்மான் குரானா, ஓரிரு மாதங்கள் கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ள இருக்கிறார். படத்துக்காக கங்குலி போல சில ஷாட்களை அடித்து ஆட கற்றுக்கொள்ள இருப்பதாகவும் ஆயுஷ்மான் குரானா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.