ட்ரிம் 11 உடனான ரூ.358 கோடி மதிப்பிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சி ஸ்பான்சர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. புதிய சட்டம் இயற்றப்பட்ட நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு ஆன்லைன் கேம்களை தடை செய்ய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளதால் ட்ரீம் 11 உடனான ஒப்பந்தத்தை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக முறித்துள்ளது. இனி இதுபோன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்போவதில்லை என்று பிசிசிஐ உறுதிபடத் தெரிவித்துள்ளது.

