இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தல்; பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நடக்கும் தேர்தல் என்பதால் வெற்றி யாருக்கு என்பதில் பெரும் எதிர்பார்ப்பு

அரசியல் இந்தியா இலங்கை உலகம் செய்திகள் தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. ஒவ்வொரு முறையும் மக்கள் பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் இலங்கையில் இடம்பெறும் முதலாவது தேர்தல் இது என்பதால் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
முந்தைய அதிபர் தேர்தல்களைப் போலல்லாமல், தற்போதைய தேர்தல் மிகவும் சிக்கலானது. நான்கு முனை போட்டி இந்த தேர்தலில் காணப்படுகிறது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவும், ஏகேடி என அழைக்கப்படும் மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுன (ஜேவிபி) வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சமகி ஜன பலவேகய (எஸ்ஜேபி) கட்சியின் நமல் ராஜபக்ச ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இலங்கையில் 25% தமிழ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் சிறுபான்மையினராக உள்ளனர். சஜித் மற்றும் ரணில் இருவரும் இந்த வாக்குகளை உற்று நோக்குகின்றனர். அவர்களில் பெரும்பாலோரை கார்னர் செய்ய ரணிலுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச அடுத்த மூன்று மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகவும் போட்டியிடுகிறார்.
பெரும் பரபரப்பு மற்றும் எதிர்பார்ப்பான சூழலில் இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமை செப்டம்பர் 21 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *