அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

இந்தியா சிறப்பு சினிமா செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை வழங்குகிறார். த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் போன்ற பல நடிகர்கள் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றது, மேலும் இது பொங்கலுக்கு வெளியிடப்படும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஞாயிற்றுக்கிழமை (டிச.22) முடிவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. இதற்கான தகவலுக்கு அஜித் மற்றும் மகிழ் திருமேனி உட்பட உள்ள புகைப்படம் லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இயக்குநர் மகிழ் திருமேனி இதுகுறித்து கூறும்போது, “சார், உங்களுக்கு அளவுக்கு மீறிய அன்பும், நன்றிக்கடனும் உரித்தாகட்டும். நீங்கள் எங்கள் அனைவருக்கும் வழிகாட்டி, ஊக்கமளித்து, உத்வேகமாக இருக்கிறீர்கள். ‘விடாமுயற்சி’ திரைப்படம் என்பது நீண்ட கால முயற்சியின் வெற்றியாகும். முழு குழுவும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட முறையில், முதல் நாளிலிருந்து இன்று வரை நீங்கள் எனக்கு வழங்கிய அன்பு மற்றும் ஆதரவுக்கு நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அன்பும் மரியாதையும்” என மகிழ் திருமேனி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *