டில்லி மெட்ரோவில் மது எடுத்துச் செல்ல அனுமதி; நபருக்கு 2 பாட்டில்கள் அனுமதி

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை வைத்திருக்க டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இதன் மூலம் டெல்லி மெட்ரோவின் அனைத்து வழித்தடங்களிலும் ஒரு நபர் இனி அதிகபட்சம் இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், மெட்ரோவுக்குள் மது அருந்த தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக டிஎம்ஆர்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நபருக்கு இரண்டு சீல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் டெல்லி மெட்ரோவில் விமான நிலைய எக்ஸ்பிரஸ் லைனில் உள்ள விதிமுறைகளுக்கு இணையாக கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது.” எனத் தெரிவித்துள்ளது.
டிஎம்ஆர்சி தனது அறிக்கையில் மேலும், மெட்ரோ ரயிலில் பயணிகள் மதுபானம் எடுத்துச் செல்வது அனுமதிக்கப்பட்டாலும், எந்தவொரு பயணியும் குடிபோதையில் அநாகரீகமாக நடந்து கொண்டால், சம்பந்தப்பட்ட சட்ட விதிகளின் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.
இதற்கிடையே டெல்லி மெட்ரோவில் தடைசெய்யப்பட்ட பொருட்களில் கூர்மையான பொருட்கள், வெடிக்கும் பொருட்கள், கருவிகள், எரியக்கூடிய பொருட்கள், செயலிழக்கும் இரசாயனங்கள் மற்றும் பிற ஆபத்தான பொருட்கள் மற்றும் துப்பாக்கிகள் மற்றும் பிற தாக்குதல் பொருட்கள் ஆகியவை உள்ளன.
இதில் மதுபாட்டில்களும் இருந்த நிலையில், அது தற்போது விலக்கப்பட்டு அதிகபட்சம் இரண்டு பாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *