இந்தியா மீது 25% கூடுதல் வரி விதிக்கப்படும் முடிவில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று அமெரிக்கா உறுதியாக தெரிவித்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்துவதற்கான அமைதிச்சாலை இந்தியா வழியாக செல்லும் என பீட்டர் நவாரோ கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து இந்தியா ஈட்டும் பணம் மூலம் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் பெறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முன்னதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

