இந்திய பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி: உலகின் கவனம்

அறிவியல் மற்றும் அறிவியல் கண்டுபிடிப்புகள் இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தலைமையில், சுதந்திரமான, இளம் மற்றும் நவீன இந்தியா இராணுவம் என்ற நோக்கத்தை அடைய பாதுகாப்புத் துறையில் பல சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டன.

போதுமான தேசிய தொழில்துறை மேம்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்கிறது.மேலும் இராணுவப் படைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத் போர்களை சமாளிக்கும் திறன் கொண்ட இளம், தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட ராணுவத்தை உருவாக்கும் இலக்குடன் ஒரு முக்கியமான சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

அதன் குறிக்கோள் ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ மற்றும் பாதுகாப்பு ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சிகள்.
உலகளாவிய பல நாடுகள் இந்திய உபகரணங்களில் அதிக ஆர்வம் காட்டுகின்றன.

முதலில் இந்தியா பாதுகாப்பு உபகரணங்களை இறக்குமதி செய்து வந்தது, ஆனால் சமீபத்தில் உலகளாவிய ஏற்றுமதியாளராக மாறியது .

இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான பொருட்களின் ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்துள்ளது. எனவே இந்திய அரசு சர்வதேச அளவில் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களை தயாரித்து சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

இந்திய பாதுகாப்பு படைகள் உள் நாட்டிற்கேற்ப கொள்கைகளும் மாற்றப்பட்டன.
இந்த வகையில், இந்தியா இப்போது 90 நாடுகளுக்கு பாதுகாப்பு துறை தொடர்பான உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது.

ஆய்வு அறிக்கைகளின் படி ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் மற்றும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்கள் , இந்தியாவின் பாதுகாப்பு உபகரண ஏற்றுமதியை அதிகரித்து வருகின்றன.

இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2024-25 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் 78% அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ரூ 3885 கோடியாக இருந்தது, இந்த ஆண்டு ரூ 6915 கோடியாக இருந்தது.

வெடிபொருட்கள், சிறிய துப்பாக்கிகள், துப்பாக்கிகள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் விரைவான தாக்குதல் வாகனங்கள் பொதுவாக இந்தியாவில் இருந்து பல நாடுகளுக்கு அனுப்படுங்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *