
ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்தப் போட்டியில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போகட் வென்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இருப்பினும், இறுதிப் போட்டியின் நாளில், வினேஷ் போகட் 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
தொடர்ந்து 82 போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பானின் சுசாகியை தோற்கடித்து, போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என இந்தியாவே காத்திருந்தது.

கடைசி நிமிடத்தில் வெள்ளிப் பதக்கம் கூட பெறாமல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் இந்திய ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் விளையாட்டு தீர்ப்பாயத்திற்குச் சென்றார், ஆனால் அவர்கள் வெள்ளிப் பதக்கத்தை தர மறுத்துவிட்டனர்.
வினேஷ் போகட் இன்று காலை பாரிஸில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைதார். டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வினேஷ் போகத் தங்கம் வெல்லாவிட்டாலும், இந்தியாவின் தங்கப் பெண் என்று பல ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
வினேஷ் போகத் நேற்று பதிவிட்ட கடிதத்தில், பெற்றோர் மற்றும் கணவர், தனது பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் , மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

