அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார். இதற்குப் பிறகு, இஸ்ரேல் தனது வெளியுறவுத் துறை அமைச்சரின் வாயிலாக அந்த ஆணையத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவர், அமெரிக்காவின் இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் எனவும் கூறினார். எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ள கருத்தில், “ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இருந்து விலகும் அதிபர் டிரம்பின் முடிவை இஸ்ரேல் வரவேற்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து செயல்படுகின்றன. மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையத்தில் (UNHRC) இஸ்ரேல் பங்கேற்காது என அவர் தெரிவித்துள்ளார். மனித உரிமைகளை மீறுபவர்களை பாதுகாப்பதற்காக அவர்களை மறைத்து வைப்பதன் மூலம், UNHRC மத்திய கிழக்கில் உள்ள ஒரே ஜனநாயகமான இஸ்ரேலை தவறாக சித்தரிக்கிறது. இந்த அமைப்பு மனித உரிமைகளை மேம்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு ஜனநாயக நாட்டை குற்றம் சாட்டுவதிலும் யூத விரோதத்தை பரப்புவதிலும் கவனம் செலுத்துகிறது. இஸ்ரேல் இனி இந்த வகை பாகுபாட்டை ஏற்காது என்று அவர் மேலும் தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தற்போது அமெரிக்க பயணத்தில் உள்ள நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

