ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்து தீர்மானத்திற்கு ஒப்புதல்

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் நிகழ்வுகள் முதன்மை செய்தி

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கும் தீர்மானத்திற்கு துணை நிலை கவர்னர் ஒப்புதல் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019-ல் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாகாணமான ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில், 90 தொகுதிகளை உள்ளடக்கிய ஜம்மு-காஷ்மீரில் கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் 3 கட்டங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தேசிய மாநாடு கட்சி 42 தொகுதிகளில் வெற்றி பெற்றது, மேலும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் 6 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ., 29 தொகுதிகளை கைப்பற்றியது. தேசிய மாநாடு கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா கடந்த 16-ம் தேதி தனது பதவியை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், அக்டோபர் 18 அன்று நடைபெற்ற தேசிய மாநாடு கட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஒமர் அப்துல்லா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கான கோரிக்கையை மத்திய அரசுக்கு முன்வைத்து, ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்கா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது, மேலும் அவர் இதற்கான ஒப்புதலை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க முதல்வர் ஒமர் அப்துல்லா விரைவில் டில்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்திக்க திட்டமிட்டுள்ளார் என தேசிய மாநாடு கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *