வக்ஃபு திருத்தச் சட்டத்தின் அடிப்படையில், வக்ஃபு வாரியத்திற்கு புதிய உறுப்பினரை நியமிக்க கூடாது என்றும், மேலும், வக்ஃபு திருத்தச் சட்டத்தின் கீழ் எந்த நில வகைப்படுத்துதலும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் 5 ரிட் மனுக்கள் மட்டுமே விசாரிக்கப்படும் என்பதால் வக்பு சொத்துக்களைப் பற்றிய மாவட்ட ஆட்சியர்களின் விசாரணை முடிவுகளை செயல்படுத்துவதற்கும் உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடுமுழுவதும் தொடரப்பட்ட வழக்கில் இது தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது.

