முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளவுள்ளார்

Nri தமிழ் வணிகம் அரசியல் இந்தியா செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு புலம் பெயர்ந்த தமிழர்கள் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள் வேலைவாய்ப்புச் செய்திகள்

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் மே 23-ஆம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும்,அதற்கு ஏற்ற வகையில் பயணத் திட்டம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ள நிலையில், மேலும் முதலீடுகளை ஈர்க்கின்ற வகையிலும், நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக சிங்கப்பூர் நாட்டிற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ள உள்ளார். இதேபோன்று உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் விதமாக துறைவாரியாக அமைச்சர்கள் வெளிநாடு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *