தமிழக மீனவர்கள் எல்லையை மீறி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது ஒரு தொடர்ச்சியான நிகழ்வாக மாறியுள்ளது. இந்நிலையில், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காரைக்கால் மீனவர்கள் கடந்த ஜனவரி 9ம் தேதி மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அவர்களில் சிலர் இலங்கையின் கடல் எல்லையில் மீன்பிடித்ததாகக் கூறி, தமிழக மீனவர்களை 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், மீனவர்களின் விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தகவல்களின் அடிப்படையில், 10 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
