மனிதன் ஆற்றங்கரைகளில் தங்கி விவசாயம் செய்து வாழ ஆரம்பித்த காலத்தில் இருந்து மனிதன் நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்தான் என்று சொல்லலாம். ஒவ்வொரு மனிதனும் தான் இறப்பதற்குள் குறைந்தது நிலத்தை வாங்கி அதை சொந்தம் கொண்டாட வேண்டும் என்று ஆசை படுகிறான். உலகில் அதிக நிலம் யார் வைத்திருக்கிறார்கள் ? எவ்வளவு நிலம் இருக்கும் என்று நீங்கள் யோசித்ததுண்டா? அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.
உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் நமக்கு மிகவும் பரிச்சயமாவார்கள் தான். சொல்ல போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்லலாம். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லை.ஆனால் நிலங்கள் வாங்கி அதன் அதிகாரங்களைக் கொண்டுள்ளனர். யார் என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்களாம். கிராமப்புற விவசாய நிலங்கள் , காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள் . கடல் கரைகள் கூட அவர்களுக்கு இருக்காம். உலகம் முழுவதும் அவர்களது நிலங்களையும் சொத்துக்களையும் கவனிக்க தனி ஒரு நிறுவனம் இயங்கி வருகிறதாம்.
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரது தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்தச் சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவர் அதன் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல. அவர் மன்னராக இருக்கும் வரை, இந்த சொத்து அனைத்தும் அவரது சொத்தாக கருதப்படும்.
இன்சைடர் மற்றும் பல வர்த்தக வலைத்தளங்களின்படி, இளவரசர் சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கிறார். இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் உள்ளன. உலகின் மொத்த செல்வத்தில் 16.6 சதவீதம் பிரிட்டிஷ் மன்னரிடம் உள்ளது.
தி கிரவுன் எஸ்டேட் என்ற அமைப்பு இந்த முழு சொத்தையும் கவனித்து பராமரிக்கிறது. பிரிட்டிஷ் அரச குடும்பம் 250,000 ஏக்கர் நிலத்தை நேரடியாக கையாள்கிறது. மற்றவை 115,000 ஏக்கர் நிலம் விவசாயம் மற்றும் காடுகளாக உள்ளன. கிரவுன் எஸ்டேட் இதன் மூலம் பல்வேறு ஷாப்பிங் சென்டர்களை நடத்துகிறது மற்றும் மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி மற்றும் ஸ்லேட் போன்ற பொருட்களின் வர்த்தகத்தையும் கையாள்கிறது.
பட்டியலில் இதற்குப் பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் 8,30,000 சதுர மைல்களை ஆட்சி செய்கிறார் மற்றும் ஒரு பெரிய நிலப்பரப்பை வைத்திருக்கிறார். எண்ணெய் வியாபாரம் செய்யும் சவுதி அரச குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாகவும் மிகவும் சக்திவாய்ந்ததாகவும் உள்ளது.

