நாடு முழுவதும் 10,12 வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் தொடங்கின

இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கல்வி மற்றும் கல்வி சார்ந்த செய்திகள் செய்திகள் தமிழ் பள்ளி நிகழ்வுகள் தமிழ்நாடு நிகழ்வுகள் பெண்கள் மற்றவை முதன்மை செய்தி

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, ஏப்ரல் 10 வரை நடைபெறும். சிபிஎஸ்இ
10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது. தமிழகம் உள்பட நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் படி, இந்த ஆண்டு முதல் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றன. முதல் வாரியத் தேர்வை எழுதாமல், நேரடியாக இரண்டாவது வாரியத் தேர்வை எழுதலாமா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால், அனைத்து மாணவர்களும் முதல் வாரியத் தேர்வை எழுதுவது கட்டாயம் என சிபிஎஸ்இ தெளிவுப்படுத்தியுள்ளது.
முதல் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் தங்கள் மதிப்பெண்களை மேம்படுத்த 3 முக்கிய பாடங்களில் அதாவது, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் மற்றும் மொழிகள் பாடங்களில் மீண்டும் தேர்வு எழுதலாம் என விளக்கமளித்துள்ளது. முதல் தேர்வில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களை எழுதத் தவறிய மாணவர்கள் இரண்டாம் வாரியத் தேர்வு எழுதத் தகுதி பெற மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *