கர்நாடகாவில் ஜூன் 16 முதல் அனைத்து வகையான பைக் டேக்சிகளுக்கு ஐகோர்ட் தடை.

இந்திய வணிகம் இந்தியா சிறப்பு செய்திகள் நீதி மன்றம்

கர்நாடகாவில் ஜூன் 16 ஆம் தேதி முதல் பைக் டாக்ஸி சேவைகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் தடையை எதிர்த்து ராபிடோ (Rapido) நிறுவனம் தாக்கல் செய்த மனுவுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. பைக் டாக்ஸி துறையில் முக்கிய நிறுவனமான ராபிடோ, இந்தத் தடையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இடைக்கால நிவாரணமும் கோரியது. இருப்பினும், போக்குவரத்துத் துறையின் உத்தரவுக்குத் தடை விதிக்க கர்நாடக நீதிமன்றம் மறுத்தது. இதன் மூலம், அத்தகைய சேவைகளைத் தடை செய்யும் மாநில அரசின் முடிவை நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. போக்குவரத்துத் துறை முன்னதாக பைக் டாக்ஸி ஆபரேட்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் அவர்களின் சேவைகள் சட்டவிரோதமானவை என்று அதில் குறிப்பிட்டிருந்தது.

பயணிகள் போக்குவரத்துக்கு வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் வணிக ரீதியாகப் பதிவு செய்யப்பட்டு, முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று அரசு சார்பில் வாதிடபட்டது. இந்த நடவடிக்கை ராபிடோ மற்றும் ஊபர் மோட்டோ (Uber Moto) போன்ற பல செயலி அடிப்படையிலான பைக் டாக்ஸி சேவை நிறுவனங்களை பாதிக்கிறது.இந்த சேவைகள், குறிப்பாக பெங்களூரு போன்ற போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில், மலிவான மற்றும் விரைவான பயணங்களை வழங்குவதில் பிரபலமாக இருந்தன. நீதிமன்றத்தின் இந்த முடிவைத் தொடர்ந்து, ஜூன் 16 முதல் கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைகளை நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறினால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடகா அரசு மோட்டார் வாகன சட்டத்தில் உரியச் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளும் வரை இந்த தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *