ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளுக்கு அதிகபட்சமாக 100% வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த மசோதா ட்ரம்பின் கையெழுத்துக்குப் பிறகு சட்டமாகும்.100% வரி அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களின் விலை அதிகரித்து, ஏற்றுமதியாளர்களுக்கு சவால் ஏற்படலாம். அதேபோல், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் மாற்றம் ஏற்பட்டால், மாற்று நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய சூழலும் உருவாகலாம்.எனினும், தற்போது இந்தியா மீது 100% வரி விதிக்கப்பட்டுவிட்டது என்று கூற முடியாது. மசோதா சட்டமாகி, அதிபர் ட்ரம்ப் அந்த அதிகாரத்தை பயன்படுத்தினால் மட்டுமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமலுக்கு வரும்.

