அமெரிக்க பொருட்களுக்கு பல நாடுகள் அதிக வரி விதிக்கின்றன, இதன் பதிலடியாக, அந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்நிலையில், சீன பொருட்களுக்கு 245% இறக்குமதி வரி விதித்து டிரம்ப் அதிரடி உத்திரவிட்டுள்ளார். இதுவரை 145% இருந்த இறக்குமதி வரியை 245% ஆக உயர்த்துவதாக அமெரிக்கா அரசு அறிவித்துள்ளது. ஏவுகணைகளை தயாரிப்பதற்கும் மின்சார கார்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அரிய உலோகங்களுக்கு சீனா அரசு ,அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு பிறகு, அமெரிக்கா அந்த உலோகங்களுக்கு விதிக்கப்படும் வரியை அதிகரித்துள்ளது. மேலும், சீனா அரிய உலோகங்களை அனுப்பாததால் அமெரிக்க பாதுகாப்பு துறைக்கு ஏற்படும் சிக்கல்களை ஆராய டிரம்ப் ஆணை பிறப்பித்தார். சீனாவின் தடையால் அமெரிக்காவின் பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சி அனைத்தும் பாதிக்கப்படும் என்பதால், சீன பொருட்களுக்கு 245% வரி விதிக்க டிரம்ப் உத்தரவிட்டார். அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான வர்த்தகப் போர் உலகளாவிய பொருளாதார நிலையை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும் என நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

