விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அருணா வெற்றிப் பெற்றார் – 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வென்றுள்ளார்

இசை இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கலை / கலாச்சாரம் சினிமா சின்னத்திரை செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் புலம் பெயர்ந்த தமிழர்கள் மற்றவை முதன்மை செய்தி

சூப்பர் சிங்கர் 9 இறுதிப் போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார்.
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 9-ன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் போட்டியாளர் அருணா ரவீந்திரன் சூப்பர் சிங்கர் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது. தவிர 60 லட்சம் மதிப்புள்ள ஒரு வீட்டையும் பரிசாகப் பெற்றார்.
இறுதிப் போட்டியின் போது, நடுவர்களும் நடுவர் குழுவும், சூப்பர் சிங்கர் சீசன் 9-ன் வெற்றியாளராக அருணா ரவீந்திரனை அறிவித்தனர். அதன் பிறகு, தனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த பயணம் முழுவதும் தனக்கு முதுகெலும்பாக இருந்த தனது குரு மற்றும் ரியாலிட்டி ஷோவின் வழிகாட்டிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
சூப்பர் சிங்கர் சீசன் 9, தமிழ் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாகும். இதில் அனுராதா ஸ்ரீராம், பி. உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக உள்ளனர். மகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *