விவேக் ராமசாமி, அமெரிக்க அரசின் செயல் திறனை மேம்படுத்துவதற்கான துறையை விலக்குவதாக அறிவித்துள்ளார், மேலும் எலான் மஸ்க் குழு இந்த பணியை சிறப்பாக நிறைவேற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் வெற்றியடைந்த அமெரிக்க அதிபர் தேர்தலுக்குப் பிறகு, செயல் திறன் துறை (Department of Government Efficiency – DOGE) உருவாக்கப்பட்டது. இதனை தொழிலதிபர் விவேக் ராமசாமி மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் இணைந்து கவனிக்கவுள்ளதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இந்த விவகாரத்தில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், செயல் திறன் துறையின் வளர்ச்சியில் பங்காற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது என்பது பெருமை அளிக்கிறது. அரசாங்கத்தை வழிநடத்துவதில் எலான் மற்றும் அவரது குழுவினர் வெற்றியடையுமென எனக்கு நம்பிக்கை உள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், “ஓஹியோ மாகாணத்திற்கான எனது எதிர்கால திட்டங்களை விரைவில் பகிர்ந்துகொள்வேன். அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்க நாங்கள் அனைவரும் தயாராக இருக்கிறோம்!” எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஓஹியோ மாகாணத்தின் ஆளுநர் பதவிக்கு போட்டியிடும் நோக்கில் விவேக் ராமசாமி அரசு செயல் திறன் துறையை விட்டு வெளியேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அவர் வெளியேறுவதற்கான காரணமாக எலான் மஸ்கின் பெயர் குறிப்பிடப்படுகிறது. குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தேர்தலில் போட்டியிட்ட விவேக் ராமசாமி, அந்த தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், ட்ரம்பை ஆதரித்து, அவரது நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

