நீட் வினாத்தாள் கசிவு போராட்டம்: அரசின் உறுதிமொழியைத் தொடர்ந்து 26 நாள் உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம் வாங்சுக்.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் போராட்டம்/ கலவரம் முதன்மை செய்தி

நீட் வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு எதிராக, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி மாணவர் அமைப்பினர் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, ஜந்தர் மந்தரில் 26 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஒன்றிய அமைச்சர் ஜேபி.நட்டா அவரை சந்தித்தார்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதாக அமைச்சர் ஜேபி நட்டா உறுதி அளித்தார். மேலும், வினாத்தாள் கசிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.வினாத்தாள் கசிவு தொடர்பாக குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது என்று பிரதமர் மோடி வீடியோ மூலம் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *