கரூரில் விவசாயத்தை காக்க குளங்களை தூர்வாரும் அமெரிக்க ஐ.டி ஊழியர்.

அமெரிக்கா ஆரோக்கியம் இந்தியா இயற்க்கை உலகம் சிறப்பு செய்திகள் தமிழ்நாடு மண்மணம் விவசாயம்

கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூரை அடுத்த வரவணை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி, ஓய்வுபெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் வரவணை ஊராட்சி தலைவராகவும் பணியாற்றியவர். இவரது மகன் நரேந்திரன், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கணினி தொழில்நுட்ப ஆலோசகராக வேலை செய்கிறார். விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கையாக, வரவணை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள குளங்களை தூர் வாரும் திட்டத்தை நரேந்திரன் மேற்கொண்டு வருகிறார். இதற்காக, சொந்த ஊருக்கு வந்த நரேந்திரன், கரூர் மாவட்ட ஆட்சியரின் அனுமதியுடன் மத்தியமடை குளம், கோட்டபுளியப்பட்டி மணியார் மடைகுளம், கீ.த.வெள்ளப்பட்டி தலையாரி குளம், சுண்டுகுழிப்பட்டி வேலன்குளம் என 5 குளங்களை தனிப்பட்ட செலவில் தூர் வாரியுள்ளார். தற்போது பாப்பான் குளத்தை தூர் வாரும் பணியை நரேந்திரன் சமீபத்தில் தொடங்கியுள்ளார். அவர் கூறியதாவது: “நான் அரசுப் பள்ளியில் படித்து, தற்போது அமெரிக்காவில் வேலை செய்கிறேன். விவசாயத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எனது சொந்த கிராமத்தில் நீர் வளத்தை அதிகரிக்கும் வகையில் குளங்களை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறேன்.” இந்த பகுதியில் உள்ள 16 குளங்களை தூர் வார திட்டமிட்டுள்ள நிலையில், இதுவரை 5 குளங்கள் தூர் வாரப்பட்டுள்ளன. தற்போது 6-வது குளம் தூர் வாரப்படுவதற்காக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் பாதுகாக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *