இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக குடும்பத்துடன் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தனது மனைவி இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று காலை இந்தியாவிற்கு வந்தார். டெல்லி பாலம் விமான நிலையத்தில், வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். பிரதமர் மோடி மற்றும் துணை அதிபர் வான்ஸ் தலைமையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை மாலையில் நடைபெற்றது. இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது பற்றியும் மற்றும் வரி தொடர்பான செய்தியை ஆலோசனை நடத்தினர். மேலும், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை விரைவில் நிறைவேற்றுவது குறித்து முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என கூறபட்டுள்ளதாக தகவல். மேலும் இந்த சந்திப்பின் பின்னர், பிரதமர் மோடி வான்ஸ் மற்றும் உஷா தம்பதியினருக்கு இரவு விருந்து வழங்கினார்.பின் டெல்லியில் இருந்து பயணித்த வான்ஸ், உஷா தம்பதியினர் இன்று ஜெய்ப்பூர் சென்று பல்வேறு புராதன சுற்றுலா தலங்களை பார்வையிட உள்ளனர்.
