உலகக்கோப்பை தொடரில் அமெரிக்கா அணியை 29 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரை இந்திய அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.
உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ளது. முதல் நாளான இன்று 3 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் நெதர்லாந்து அணியை பாகிஸ்தானும், ஸ்காட்லாந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றது.
3 ஆவது போட்டியாக இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதும் மேட்ச் மும்பை வான்கிடே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற அமெரிக்கா அணி பவுலிங்கை தேர்வு செய்ததை தொடர்ந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
இந்திய அணியின் வீரர்கள் தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். அடுத்து இணைந்த இஷான் கிஷன் – திலக் வர்மா இணை ஓரளவு ரன்கள் சேர்த்தது.

