சிங்கப்பூரின் சுற்றுலாத் துறையில் இந்தியா தொடர்ந்து முக்கியச் சந்தையாக இருந்து வருகிறது. அந்த வகையில், 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்றுள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் (STB) தெரிவித்துள்ளது.2026 ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் சிங்கப்பூருக்கு வந்த இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்தை கடந்துள்ளது. உலகளவில் சுற்றுலாத் துறை பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையிலும், இந்தியர்களின் வருகை தொடர்ந்து வலுவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியப் பயணிகள், விமான நிறுவனங்கள் மற்றும் பயணத் துறையைச் சேர்ந்த நிறுவனங்களுடன் சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் பல ஆண்டுகளாக உருவாக்கியுள்ள வலுவான உறவுகளே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.மேலும், 2026ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சிங்கப்பூரில் அதிகம் செலவு செய்த வெளிநாட்டு பயணிகள் பட்டியலிலும் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் இந்தியப் பயணிகள் சுமார் 374 மில்லியன் சிங்கப்பூர் டாலர் செலவிட்டுள்ளதாக STB தெரிவித்துள்ளது.மொத்தமாக, 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் 81.9 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். பிராந்திய அளவிலான பயணச் சவால்கள் மற்றும் ஹோட்டல் கட்டணங்கள் அதிகரித்துள்ளதால், சிங்கப்பூருக்கு வரும் மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 சதவீதம் குறைந்துள்ளது.

