மும்பை பங்கு சந்தை சரிவு முதலீட்டாளர்கள் நஷ்டம்

அரபு நாடுகள் இந்திய வணிகம் இந்தியா உலகம் சிறப்பு செய்திகள் பொருளாதாரம் முதன்மை செய்தி

கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடுமையான சரிவினால் முதலீட்டாளர்கள் ரூ.15 லட்சம் கோடி வரை இழப்புகளை சந்தித்துள்ளனர். மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றம் இந்திய பங்குச்சந்தைக்கு தீவிர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை புதிய உச்சங்களை அடைந்து சாதனை படைத்த நிலையில், இந்த வாரத்தின் ஆரம்ப இரண்டு நாட்களில் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இன்று, நிப்டி 546.80 புள்ளிகள் குறைந்து 25,250.10 புள்ளிகளுடன் முடிவடைந்தது, மேலும் சென்செக்ஸ் 1,769.19 புள்ளிகள் குறைந்து 82,497.10 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இதற்கிடையில், நிப்டி, பேங்க் எக்ஸ் மற்றும் மிட்கே போன்ற நிறுவனங்களின் பங்குகளும் குறைவடைந்துள்ளன.ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், லார்சன் அண்ட் டார்போ, ஆக்ஸிஸ் வங்கி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, மாருதி, கோடாக் மகேந்திரா வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் ஹெச்.டி.எப்.சி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் கடுமையான பின்னடைவை சந்தித்துள்ளன. இந்நிலையில், பங்குகளின் விலை குறைவடைந்ததன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கடந்த 3 வர்த்தக நாட்களில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பெரும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகியவை தலா 2 சதவீதத்திற்கும் மேல் சரிந்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட இந்த மிகப்பெரிய சரிவு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதற்கிடையில், சீனாவில் வழங்கப்பட்ட ஊக்க சலுகைகள் காரணமாக அந்நாட்டு பங்குச்சந்தைகளை உயர்த்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *