அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் 43 நாட்களாக நீடித்த அரசாங்க முடக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய மசோதாவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட அரசு முடக்கம் ஆகும். ஜனவரி 30 வரை அரசாங்கம் செயல்பட தேவையான நிதி வழங்கும் மசோதா செனட்டிலும், பின்னர் பிரதிநிதிகள் அவையிலும் 222 ஆதரவு, 209 எதிர்ப்பு வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அரசு முடக்கம் கடந்த அக்டோபர் 1 அன்று தொடங்கியது, அதில் சுமார் 6.7 லட்சம் அரசு ஊழியர்கள் ஊதியமின்றி வேலையை விட்டு அனுப்பப்பட்டனர். இராணுவம், காவல் துறை, விமான நிலைய பணியாளர்கள் போன்ற அவசிய சேவை ஊழியர்கள் ஊதியமின்றி பணியில் தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. இப்போது அதிபரின் கையெழுத்துடன், அரசு சேவைகள் மீண்டும் தொடங்குகின்றன; இதனால் கோடிக்கணக்கான அமெரிக்கர்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது.

