அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 4 மாதங்களில் பெய்யவேண்டிய மழை ,6 மணி நேரங்கள் தொடர்ந்து பெய்ததால், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 24 பேர் உயிரிழந்தனர். டெக்ஸாஸின் தெற்குப் பகுதியில் உள்ள சான் ஆன்டோனியோவில் சுமார் 30 சென்டிமீட்டர் கனமழை பெய்ததால், கெர்னி கவுண்டியில் பாயும் ஆற்றில் கரை புரள்கிறது. கடுமையான வெள்ளப்பெருக்கால், ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் தாழ்வான இடங்களில் உள்ள வீடுகள், வாகனங்கள் நீரில் மூழ்கின. இதனால், கெர்வி கோட்டையின் ஆற்றை ஒட்டி வசிக்கும் மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டனர். வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவர்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோடைகால முகாமில் தங்கியிருத்த 20 சிறுமிகள் உட்பட பலர் காணாமல் போயுள்ளதால் அவர்களை மிட்புப்படையினர் தேடிவருகின்றனர். கனமழையால் குவாதழு ஆற்றின் நீர்மட்டம் முக்கால்மணி நேரத்தில் 26 அடி உயரத்தை தாண்டியதாக குறிப்பிட்டுள்ள அதிகாரிகள் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
