இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதன் விளைவாக, அங்கு வணிகம் செய்பவராக உள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதற்கான காரணமாக அந்நாட்டின் முன்னணி வணிக நிறுவனமான நெஸ்லே இந்தியாவில் தனது தயாரிப்புகளை மிகுந்த அளவில் விற்பனை செய்கிறது. குறிப்பாக, மேகி நூடுல்ஸ் இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. உணவுப் பொருளான மேகி, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மிஞ்சிய ரசாயனங்களை உள்ளடக்கியதாக புகாருகள் வந்துள்ளன. இதற்கான விசாரணைகளை மேற்கொண்ட மத்திய அமைப்புகள், 2015ம் ஆண்டு மேகி நூடுல்ஸை இந்தியாவில் தடை செய்தன. மத்திய அரசின் தடைக்கு எதிராக நெஸ்லே உச்சநீதிமன்றத்தை அணுகியது. விசாரணையில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டுமே ரசாயனங்கள் கலக்கப்பட்டதாகவும், எனவே அது பாதுகாப்பான உணவாகும் எனவும் நெஸ்லே வாதிட்டது. ஆனால், மத்திய அரசு மேகியில் ஈயம் கலக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியது. 2023ம் ஆண்டு மத்திய அரசுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பு நெஸ்லே நிறுவனத்திற்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது, இதனால் தக்க சமயம் பார்த்து காத்திருந்த இந்நிறுவனம், தனது நாட்டின் அரசின் மூலம் இந்தியாவை பழி வாங்கியதாகக் கூறப்படுகிறது. சுவிட்சர்லாந்து இந்தியாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை மேற்கொண்டு வருகிறது, மேலும் பல இந்திய நிறுவனங்களும் அந்நாட்டில் செயல்பட்டு வருகின்றன. மற்ற நாடுகளுக்கு 10% வரி விதிக்கப்படும் என்கிற சட்டத்தின் அடிப்படையில், இந்தியா விருப்ப நாடுகளில் உள்ளதால் 5% வரி செலுத்துவதால் போதுமானதாக இருந்து வந்தது. ஆனால், தற்போது ஸ்விட்சர்லாந்து விருப்ப பட்டியலிலிருந்து இந்தியாவை நிக்கியது. இந்த புதிய விதி 2025 ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்கள் 10% வரியை கட்ட வேண்டிய நிலை உருவாகும் என்பது முக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

