இந்திய பங்குச்சந்தை கடும் சரிவால் முதலீட்டாளர்கள் ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 3266 புள்ளிகள் குறைந்து 72096 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெறுகிறது. 2020-ல் கொரோனா பரவலுக்குப் பிறகு, இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளன. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 1055 புள்ளிகள் குறைந்து 21,848 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட இந்த கடுமையான சரிவால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.20.16 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

