காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி: வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறவும் ஆணை

ஜம்மு-காஷ்மீரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரபல சுற்றுலாத்தலமான பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குப் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது ஈவு இரக்கமே இல்லாமல் பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தக் கொடூரத் தாக்குதலில் வெளிநாட்டினர் 2 பேர் உள்ளிட்ட 28 […]

மேலும் படிக்க

காஷ்மீர் தாக்குதல்: சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதலால் அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், காஷ்மீர் தாக்குதலால் […]

மேலும் படிக்க

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு; 26பேர் பலி, பலர் படுகாயம், உள்துறை அமைச்சர் காஷ்மீர் விரைந்தார்

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். பிரதமர் மோடி சவுதி அரேபியாவில் இருந்து உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை நடத்தினார்.காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் உயிரிழந்தோர் […]

மேலும் படிக்க

கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு.

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூரில், சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மூவர் கோவில் மற்றும் முசுகுந்தீஸ்வரர் கோவில் போன்ற பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், அங்கு உள்ள மற்ற வரலாற்று சின்னங்களை ஆராய்வதற்காக, […]

மேலும் படிக்க

முதல்முறையாக, புறநகர் ரயில் சேவையில் ஏசி வசதி இன்று முதல் தொடக்கம்.

சென்னையில் முதன்முறையாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு செல்லும் புறநகர் மின்சார ரயில் சேவையை ஏசி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்ற நிலையில், இன்று முதல் ரயில் சேவையை பொதுமக்களுக்கு […]

மேலும் படிக்க

மதுரை சித்திரைத் திருவிழா ஏப்.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, மே 10-ம் தேதி வரை நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்திரை திருவிழா ஏப்ரல் 28-ம் தேதி வாஸ்துசாந்தியுடன் தொடங்கும், மேலும் […]

மேலும் படிக்க

உலக பாரம்பரிய தினம்: தாஜ்மஹால், மாமல்லபுரம் உள்ளிட்ட புராதன சின்னங்களை இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதி.

உலகில் உள்ள பண்டைய பாரம்பரிய மற்றும் கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு அவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தவும், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18-ம் தேதி உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தச் சூழலில், மத்திய கலாச்சார அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் […]

மேலும் படிக்க