வியட்நாமில் கல்மேகி புயல் கடுமையாக தாக்கியது. இதனால் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. இந்த புயல் இதற்கு முன் பிலிப்பைன்சில் தாக்கியபோது 188 பேர் உயிரிழந்திருந்தனர், மேலும் 135 பேர் காணாமல் போனார்கள். பின்னர், புயல் வியட்நாமை நோக்கி நகர்ந்தது. வியட்நாமை அணுகும் போது தென்சீனக் கடலில் மணிக்கு 220 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. இதனால் பல மாகாணங்களில் கனமழை பெய்து, வீடுகள் மற்றும் கட்டிடங்கள் நீரில் மூழ்கின. கல்மேகி புயல் குவாங் நகாய் மற்றும் கியா லாய் மாகாணங்களுக்கிடையே கரையை கடந்தது. அந்த நேரத்தில் பல வீடுகளின் மேற்கூரைகள் பறந்து சென்றன. வியட்நாம் வானிலை மையம் தெரிவித்ததாவது: புயலால் 5 பேர் உயிரிழந்துள்ளனர், 8 பேர் காணாமல் போயுள்ளனர், 52 வீடுகள் முழுமையாக இடிந்து விழுந்துள்ளன, மேலும் மொத்தமாக 2,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

