2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி நிறுவனத்தின் திறன் அதிகரிப்பு .

அரசியல் இந்தியா இயற்க்கை சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் தமிழ்நாடு முதன்மை செய்தி

2023-24 ஆம் ஆண்டில் தமிழகத்தில் காற்றாலை நிறுவும் திறன் 9,015 மெகாவாட்டாகவும், சூரிய சக்தி மின்நிறுவும் திறன் 1,261 மெகாவாட்டாகவும் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் காற்றாலை மின்நிலையங்களை அமைப்பதற்கான உகந்த சூழ்நிலைகள் உள்ளன. குறிப்பாக, சூரிய சக்தி மின்சாரத்திற்கு சூரியனின் வெப்பத்திற்குப் பதிலாக வெளிச்சம் முக்கியமாக இருக்கிறது. தென்மாவட்டங்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் கிடைக்கின்றதால், மின்நிலையங்களை அமைக்க மிகவும் உகந்த சூழ்நிலைகள் உருவாகியுள்ளன. பெரிய நிறுவனங்கள் காற்றாலை மற்றும் சூரிய சக்தி மின்நிலையங்களை உருவாக்குவதில் ஈடுபட்டு வருகின்றன. இதன் விளைவாக, காற்றாலை மற்றும் சூரிய சக்தி நிறுவல் திறன் ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. 2019-20-ம் ஆண்டில், காற்றாலை நிறுவல் திறன் 55 மெகா வாட்டாகவும், சூரிய சக்தி நிறுவல் திறன் 1,276 மெகா வாட்டாகவும், மேற்கூரை சூரிய சக்தி திறன் 44 மெகா வாட்டாகவும் பதிவாகியுள்ளது. கடந்த 2023-24-ம் ஆண்டில், 278 மெகாவாட் திறனுள்ள காற்றாலை மற்றும் 1,281 மெகாவாட் திறனுள்ள சூரியசக்தி மின்நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அந்த ஆண்டின் முடிவில், தமிழகத்தில் உள்ள மொத்த காற்றாலை நிறுவு திறன் 9,015 மெகாவாட் ஆகவும், சூரியசக்தி மின்நிறுவின் திறன் 1,261 மெகாவாட் ஆகவும் உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *