ஐபிஎல் 18-வது சீசனின் முதல் போட்டி வரும் 22 ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் விளையாட உள்ளன. மேலும், மார்ச் 23-ம் தேதி சென்னையில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை தொடங்கியது. காலை 10.15 மணிக்கு ஆரம்பமான டிக்கெட் விற்பனை சில நிமிடங்களில் விற்றதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சிலருக்கு சிஎஸ்கே இணையதளத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாகவும் சிரமத்திற்கு உள்ளாகினர். சேப்பாக்கம் மைதானத்தில் 38,000 இருக்கைகள் உள்ள நிலையில், டிக்கெட் வரிசை 2 லட்சத்திற்கும் மேல் இருப்பதால், இந்த முறை போட்டியை நேரில் காண முடியாது என சமூக ஊடகங்களில் பலர் கவலை தெரிவிக்கிறார்கள். மேலும், பல்வேறு சட்டத்திற்கு மாறுபட்ட தளங்களில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும், அதிக விலையில் கள்ள சந்தையில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாகவும் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
