அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டு ஓராண்டு நிறைவு; மூன்று நாட்கள் கொண்டாட்டத்திற்கு விழா ஏற்பாடு

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கோயில்கள் சுற்றுலா செய்திகள் திருவிழாக்கள் மற்றும் நிகழ்வுகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவடையும் நிலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
அயோத்தி ராமர் கோயில் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் , கட்டப்பட்ட ராமர் கோயில் கடந்த ஆண்டு ஜனவரியில் திறக்கப்பட்டது. குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதன் முதலாம் ஆண்டு விழா 3 நாட்களுக்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனால் அயோத்தி நகரமே வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவில் பங்கேற்ற லட்சக்கணக்காக மக்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அயோத்தியில் குவிந்துள்ளனர். ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி ஆடிப்பாடியபடி சாமியை தரிசிக்கச் செல்கின்றனர். 3 நாட்கள் கொண்டத்தின் முதல் நாளில், பால ராமருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *