உக்ரைன்-ரஷ்யா இடையே 3 வருடங்களுக்கு பிறகு அமைதி பேச்சுவார்த்தை.

அரசியல் உக்ரைன் உலகம் சிறப்பு செய்திகள் போர் முதன்மை செய்தி ரஷ்யா

உக்ரைன் – ரஷ்யா போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவில்லாமல் நீடித்து வருகிறது, இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை வழங்கினாலும், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிர முயற்சியில் உள்ளார். கடந்த 14ம் தேதி பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் போலந்து போன்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர், அப்போது அவர்கள் உக்ரைனுக்கான தங்கள் தொடர்ந்த ஆதரவை தெரிவித்தனர்.ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள், உக்ரைன் மீது நடக்கும் தாக்குதலை 30 நாட்களுக்கு நிறுத்துமாறு ரஷ்யா அதிபர் புடினிடம் கோரிக்கை வைத்தனர். இதற்குப் பிறகு, “ஐரோப்பிய நாடுகள் முன்வைத்த போர் நிறுத்தத்தை ஏற்க முடியாது, ஆனால் அமைதியை நோக்கி செல்லும் வழிமுறைகளை கண்டுபிடிக்க பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது” என புடின் தெரிவித்தார். மேலும், மே 15ம் தேதி இஸ்தான்புல்லில் நடைபெறும் நேரா பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் வர வேண்டும் என அழைப்பு விடுத்தார். இதற்கு உக்ரைன் அதிபர் ஒப்புக்கொண்டார்.துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ருஸ்டெம் உமரோவ் தலைமையிலான உக்ரைன் அதிகாரிகள் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உதவியாளர் விளாடிமிர் மெடின்ஸ்கி தலைமையிலான ரஷ்ய அதிகாரிகள் கலந்து கொண்டனர். போர் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில், இரு நாடுகளின் அதிகாரிகள் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவது முக்கியமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *