உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றி பார்வையிட அனுமதி.

அரசியல் இந்தியா சிறப்பு செய்திகள் தமிழ்நாடு நீதி மன்றம் முதன்மை செய்தி

இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டைப் பற்றிய தெளிவான பார்வையை பெறவும், சனிக்கிழமைகளில் அதிகாரிகளின் உதவியுடன் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இதற்கான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள் மற்றும் விடுமுறை நாட்கள் தவிர, மற்ற சனிக்கிழமைகளில் பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றி பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில், பொதுமக்கள் https://guidedtour.sci.nic.in/ என்ற இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமாகும். இது 2018 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி முதல் வழங்கப்பட்ட அனுமதியாகும். இதுவரை 296 முறை பொதுமக்கள் சுற்றுப்பார்க்க அனுமதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *